`கோவை தெற்கில் தி.மு.க வாக்காளர்களுக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததா?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

Spread the love

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க 2.0 ஆட்சி அமைந்த உடன் ஒரு லட்சம் கோடி ரூபாயில் கோவை மாவட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். தொழில்துறை விரிவாக்கத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடியிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 50 ஆயிரம் கோடியிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் கோவையில் 15 சதவிகிதமாக உள்நாட்டு உற்பத்தியை பெருக்கத் திட்டமிடப்படும்.

ஜவுளித்துறையில் புதிய முதலீடுகள், சிறு, குறு தொழில்துறையை மேம்படுத்த மூலப்பொருட்கள் தயாரிப்பு திட்டம், தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற முயற்சி, ஆழியாறு – நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், கிழக்கு புறவழிசாலைப்பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட 26 திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *