“சபரிமலை வழக்கில் சிக்க வேண்டியவர்கள் சிக்கட்டும்” – நடிகர் ஜெயராமிடம் ED விசாரணை | “If there are more people who need to be implicated in Sabarimala case, let them be implicated” – ED questions actor Jayaram

Spread the love

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.

கேரள ஹைகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் மற்றும் மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

துவார பாலகர்கள் சிற்பங்களின் மீது பொருத்தப்பட்ட தங்கக் கவசங்கள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருவறை தங்கத் திருநடை சென்னையில் வைத்து பூஜை செய்தபோது அதில் நடிகர் ஜெயராம் கலந்துகொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து நடிகர் ஜெயராமை இந்த வழக்கில் சாட்சியாக மாற்ற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் அல்லாது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் நடிகர் ஜெயராமுக்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

சபரிமலை சென்றபோது அங்குவைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியின் அறிமுகம் கிடைத்ததாகவும், அவர் தனது வீட்டில் பூஜை செய்ததற்குச் சிறு தொகை தட்சிணை மட்டுமே கொடுத்ததாகவும் அவருக்கும் தனக்கும் நிதி பரிவர்த்தனை எதுவும் நடந்தது இல்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஜெயராம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் நடிகர் ஜெயராம் கூறுகையில், “சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *