”சர்க்காரா? சர்க்கஸ் கம்பெனியா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கு” – உதயநிதி | “Is this a government or a circus troupe? That is the level of this government’s performance.” – Udhayanidhi

Spread the love

அப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சி இன்னைக்கு நடந்துட்டு இருக்கு. சட்டமன்றத்துல மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை இதைப் பத்தில்லாம் பேசலாம்னு நாங்க குறிப்பெல்லாம் எடுத்துட்டு போறோம். ஆனா நாங்க கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கு முதலமைச்சர் எந்திரிச்சு பதில் சொல்றது கிடையாது.

ஒரு நான்கு அமைச்சர்கள் இருக்குறாங்க. அனைத்து கேள்விகளுக்கும் அவங்கதான் பதில் சொல்றாங்க. அதுவும் நாங்க கேட்டக் கேள்விக்கான பதில் கிடையாது. அனைத்தையும் திசை திருப்புற மாதிரி, டைவர்ஷன் டேக்டிக்ஸ் அவ்வளவுதான்.

திருமண விழாவில் பேசும் உதயநிதி

திருமண விழாவில் பேசும் உதயநிதி

அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் மக்கள் பிரச்னை பேசுவதற்கு சட்டசபைக்கு வரவில்லை. அவங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு நான்கு ரீல்ஸ். இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா எனக் கேட்கும் அளவுக்குத்தான் இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கிறது.

நம்முடைய தலைவர் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஸ்டேட்டாக நம்முடைய தமிழ்நாட்டைக் கொண்டு வந்தாங்க. 11.19 சதவீத வளர்ச்சியோடு இந்தியாவுல டெவலப்பிங் ஸ்டேட்ல நம்பர் ஒன் ஸ்டேட்டாக தமிழ்நாடு இருந்தது. இன்னைக்கு அதைக் கொண்டு போய் பாதாளத்துல தள்ளிட்டாங்க.

இந்த அரசாங்கம் ஒரு டம்மி அரசாங்கமாக, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியைப் பின்னாடி இழுத்துட்டு போய் தள்ளிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல நடக்குற எந்தப் பிரச்னையைப் பற்றியும் இன்று இருக்கக்கூடிய முதலமைச்சருக்குக் கவலை கிடையாது.

இதையெல்லாம் பார்த்து மக்கள் இப்பதான் உணர ஆரம்பிச்சிருக்காங்க. எனவே விரைவில் இந்த ஆட்சியாளர்களுடைய ஆணவத்திற்கும் கோமாளித்தனத்திற்கும் மக்கள் ஒரு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *