இதற்கிடையே, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் பாதுகாப்புப் பிரிவுகள் 1, 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மேலும் மூன்று கைபேசிகளும் இரண்டு பென் டிரைவ்களும் கைப்பற்றப்பட்டு, பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சாதனங்களில் ஆபாசமான அல்லது ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் இருந்ததாக வெளியான தகவல்களை எலக்ட்ரானிக் சிட்டி பிரிவு துணை ஆணையர் எம். நாராயணா மறுத்துள்ளார். அதே சமயம், சிக்னல் ஜாமர்களைத் தாண்டி குறிப்பிட்ட வகை ஆண்ட்ராய்டு போன்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்துத் தொழில்நுட்பத் தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா’ – போன், பென் டிரைவ் பறிமுதல்செய்த அதிகாரி! | A mobile phone and a pen drive have been seized from Prajwal Revanna at Parappana Agrahara Prison.