சிவகாசி: பெண்ணிடம் நகை, பணம் மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை!

Spread the love

விருதுநகர் மாவட்டம், சிவகாசி போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி மீனாட்சி. பழனியப்பன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீனாட்சிக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மீனாட்சி அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

சிவகாசி

இந்த நிலையில், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த கார்த்தீஸ்வரி என்பவர், மீனாட்சியிடம் நகை மற்றும் பணம் வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 87 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இந்த பணத்தை தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து அதில் கிடைக்கும் வட்டித்தொகையை மீனாட்சியிடம் தந்துவிடுவதாக கார்த்தீஸ்வரி கூறியுள்ளார். ஆனால், வட்டிப்பணம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு அவரது கணவர் கோவிந்தராஜ் மகன்கள் கணேஷ் பாண்டி, சக்தி பாண்டி ஆகியோரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் பலமுறை பணம் கேட்டும் உரிய பதில் அளிக்காத நிலையில், சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிவகாசி நீதிமன்றம்

இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா மீனாட்சியிடம் பணம், நகைகளை பெற்று மோசடி செய்ததாக கார்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவர் கோவிந்தராஜ் மற்றும் இரு மகன்கள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *