‘சென்னை பிரசாரத்தில் பேச மறுத்த விஜய்; ஏமாற்றமடைந்த தவெக தொண்டர்கள்? – விவரம் என்ன? |Chennai Campaign Shock: Why Did Vijay Stay Silent? TVK Workers Express Disappointment – Full Details”

Spread the love

இந்நிலையில், இன்று விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறையினர் தீவிரமாக பாதுகாப்பு வழங்கியிருந்தனர். விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவரின் காரை சுற்றி 10 ஜீப்களும் 2 போலீஸ் வேன்களும் வளையமாக போடப்பட்டு, சிக்னல்கள் க்ளியர் செய்யப்பட்டு பக்கவாட்டு சாலைகளை ப்ளாக் செய்து சௌகரியமாக அழைத்து வந்தனர். விஜய்யை பார்ப்பதற்காகவும் அவரின் பேச்சை கேட்பதற்காகவும் மதியம் 1 மணி முதல் தொண்டர்கள் மூன்று பாயின்ட்டிலும் காத்திருந்தனர். தொகுதி மறுவரை பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

8000 கூப்பன் விவகாரமும் தேர்தல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களை பற்றியுமே விஜய் ட்வீட் செய்திருந்தார். பற்றியெரிந்து கொண்டிருக்கும் அந்த விவகாரங்களைப் பற்றி விஜய் பேசுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்க, மூன்று பாயின்ட்டிலுமே விஜய் வேட்பாளர்களை மட்டுமே அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தை முக்கியமான கட்டத்தில் பாஜக கையில் எடுத்திருக்கிறது, அதை டெல்லி Vs தமிழ்நாடு என தேர்தல் பிரச்னையாக திமுக தீவிரமாக எடுத்துச் செல்கிறது. இந்நிலையில், கொள்கை எதிரி பற்றியும் அரசியல் எதிரி பற்றியும் விஜய் பேசி ஸ்கோர் செய்வார் என எதிர்பார்த்த தொண்டர்கள் ஏமாந்து போயினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *