சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: மருத்துவ கண்காணிப்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு|Delhi High Court Orders Daily Monitoring of Sonam Wangchuk

Spread the love

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 19 நாள்கள் ஆகின்றன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் நீட் மாணவர்களின் மரணத்திற்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை இவருடைய போராட்டத்தின் நோக்கம்.

புது டெல்லி ஜந்தர் மந்தரில் இவர் போராட்டம் தொடங்கி 19 நாள்கள் ஆகியும் இவரது போராட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

நாளுக்கு நாள் இவரது உடல்நிலை மோசமாகி கொண்டே வருகிறது. இவர் 19 நாள்களில் கிட்டத்தட்ட 9 கிலோ எடை இழந்திருக்கிறார்.

“மத்திய அரசு தனது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், உண்ணமாட்டேன்’ என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் சோனம் வாங்சுக்.

இதனால், இவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் கட்டாய உணவு அளித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல வழக்கு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *