டெலிகிராம்: `கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல.!’ – மத்திய அரசின் கடும் வாதம்; தடையை உறுதி செய்த கோர்ட் | Delhi HC on telegram ban

Spread the love

லாப நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தளம், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. நம் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு எங்கு போவது?”வாட்ஸ்அப் போன்ற தளங்களில் ஒரு பயனர் ஒரு பாட் மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் டெலிகிராமில் ஒரு கணக்கைக் கொண்டு 40 போலி பாட்டுகளை உருவாக்க முடியும் என்பதால், இதில் முறைகேடுகள் மிக வேகமாகப் பரவுகின்றன.

இந்தத் தளம் முழுமையாக ‘கிளவுட்’ தொழில்நுட்பத்தில் இயங்குவதாலும், கணக்கை நீக்கினால் அனைத்துத் தரவுகளும் அழிந்துவிடும் என்ற அதன் கொள்கையாலும், இதன் மூலம் குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து கண்காணிப்பது சாத்தியமற்றது.

கடந்த 2024-ஆம் ஆண்டிலும் இதேபோன்று நீட் தேர்வு முடிந்த பிறகு வினாத்தாளைப் பதிவிட்டு, டெலிகிராமின் ‘எடிட்டிங்’ வசதியைப் பயன்படுத்தி அது தேர்வுக்கு முந்தைய நாள் பதிவிடப்பட்டது போலத் தேதியை மாற்றியமைத்து வதந்திகள் பரப்பப்பட்டன. மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு வதந்தி பரவினால், கோடிக்கணக்கான மாணவர்கள் தெருவுக்கு வரும் மாபெரும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும். 

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

“இந்தத் தளம் அதன் பிரத்தியேகக் கட்டமைப்பால் ஒரு கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல உருவெடுத்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் வன்முறைகளைத் தடுக்க இணையச் சேவை  முழுமையாக முடக்கப்படும் போது, அங்கு 10 சதவீதத்தினர் மட்டுமே வன்முறையாளர்கள், மீதமுள்ள 90 சதவீதத்தினர் பொது மக்கள் தான். 

டெலிகிராமில் ஒரு சேனலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் பயனர்களை, வெறும் சில நொடிகளில் மற்றொரு புதிய சேனலுக்கு முழுமையாக மாற்றிவிட முடியும். இந்தத் தனித்துவமான அம்சம் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்” என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி மிகக் கடுமையான வாதத்தை முன்வைத்தார். பயங்கரவாதச் செயல்பாடுகள் மற்றும் பிற சட்டவிரோதக் காரணங்களுக்காக உலக நாடுகள் பலவும் டெலிகிராம் மீது எடுத்துள்ள கடுமையான தடை நடவடிக்கைகளின் பட்டியலையும் மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

டெலிகிராம் தரப்பில் இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட சாதாரண பயனர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் வாதிடப்பட்ட போதிலும், நீட் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே முக்கியம் என நீதிமன்றம் கருதியுள்ளது. இதன் காரணமாக, ஜூன் 22 வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி முடக்கப்பட்டிருப்பது சட்டப்படி செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *