“தனிப்பெரும் கட்சியாக த.வெ.கவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்”- திருமாவளவன்| Thol. Thirumavalavan has spoken about the Governor not granting permission for Vijay to assume office.

Spread the love

பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில் இன்று நடைபெற இருந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ” 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை காண்பித்துவிட்டு பதவியேற்புக்கு வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது.

திருமாவளவன்

திருமாவளவன்

த.வெ.க தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியாக த.வெ.கவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

எனவே விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *