தனுஷ்கோடி – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான இந்த 58 கி.மீ தூரத்தினை நீந்தி கடந்த காம்யா திங்கள் கிழமை காலை 7.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரையேறினார். இதுவரை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையிலான ஒரு வழித்தடத்தை மட்டுமே வீரர் வீராங்கனைகள் நீந்திக் கடந்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கும் இடையிலான 58 கி.மீ தூரத்தினை 17 மணி 45 நிமிடங்களில் நீந்திக் கடந்து சாதனை படைத்த நீச்சல் வீராங்கனை காவ்யா பரத்வாஜை நீச்சல் பயிற்சியாளர் ரோஜர், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் பாராட்டினர்.