தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

Spread the love

மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால், அவற்றை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் தனி செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அடையாளம் காணுதல், சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், நகர்புற வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டுகால தொலைநோக்கு செயல்திட்டத்தையும் தயாரிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய குடியிருப்பு மற்றும் தொழில் மையங்களின் உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாலை வசதிகளை திட்டமிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *