தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு; 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! – Kumudam

Spread the love

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் நிலவும் வானிலை காரணங்களால், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் உருவாகக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *