“தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி”- ராஜ்மோகனை சாடிய நயினார் நாகேந்திரன்| tn bjp leader nainar nagendran slams rajmohan

Spread the love

கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்லத் திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள்.

அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது.

காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன.

ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் தவெக அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்” என்று சாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *