தமிழ்நாடு காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் சவீதா உடற்கல்விக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

Spread the love

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான சவீதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு உட்பட்ட சவீதா உடற்கல்விக் கல்லூரி, விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் அரசு வேலை பெறுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்கல்வி நிறுவனத்தின் கடுமையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலால் 80-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தமிழ்நாடு காவல் துறை மற்றும் பாதுகாப்பு துறை பணியில் அமர்ந்துள்ளனர்.

சவீதா உடற்கல்விக் கல்லூரி
சவீதா உடற்கல்விக் கல்லூரி

600-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உடற்கல்வி ஆசிரியர்களாகவும் விளையாட்டுப் பயிற்சியாளர்களாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிவம்-3 விளையாட்டுச் சான்றிதழைப் பெற்று அரசுப் பணிகளுக்கான விண்ணப்பங்களில் கூடுதல் முன்னுரிமை பெற தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் விளையாட்டு மற்றும் அரசுப் பணித் துறைகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

மாணவர்களின் இந்தச் சாதனை குறித்து நிறுவனர் மற்றும் வேந்தர் ந மா வீரையன், அவர்கள் , “உயர்தர கல்வி, ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியே இந்த வெற்றியின் அடித்தளம் நாட்டிற்குச் சேவை செய்யும் முக்கிய துறைகளில் எங்கள் மாணவர்கள் உயரிய பொறுப்புகளை வகிப்பது பெருமைக்குரியது.

சவீதா உடற்கல்விக் கல்லூரி
சவீதா உடற்கல்விக் கல்லூரி

தேசிய மற்றும் உலகளாவிய அளவில் தொடர்ந்து சாதனை படைக்கத் தேவையான சிறந்த வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் சவீதா கல்வி நிறுவனம் தொடர்ந்து வழங்கும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *