உடனே இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே மருத்துவமனைக்கு வந்த மகளிர் காவல்துறை ஆய்வாளர் மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் அந்த மாணவி படித்து வந்தபோது, அக்கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய எரியூர் அருகே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (30) என்பவர் அவரை மிரட்டி, வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில், சதாசிவம் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ளவரை காவல்துறை தேடி வருகிறது