இந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக இருந்தன. குறிப்பாக விஜயின் ஸ்டைல், வசனங்கள் மற்றும் உடல் மொழி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. “ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற வசனம் இன்றும் பலராலும் நினைவுகூரப்படுகிறது. இந்த வசனம் விஜயின் திரைமுனை கம்பீரத்தையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
போக்கிரி திரைப்படத்தின் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு அமைந்திருந்ததுடன், விஜயின் நடனமும் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. திரைப்படத்தின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்தது.

இந்தப் படம் வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல. தீயவர்களுக்கு எதிராக துணிச்சலாக நிற்பது, கடமையை நேர்மையாக செய்வது மற்றும் சமூகத்தில் குற்றங்களை ஒழிப்பது போன்ற நல்ல கருத்துகளையும் எடுத்துரைக்கிறது. அதனால் இந்த திரைப்படம் எனக்கு இன்னும் அதிகமாகப் பிடித்திருக்கிறது.
விஜய் திரைப்படங்களில் எப்போதும் கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் மனிதநேயம் போன்ற நல்ல பண்புகள் காணப்படுகின்றன. அதனால்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரை விரும்புகிறார்கள். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பல சமூக நலச் செயல்களிலும் அவர் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கது.
நான் இதுவரை தியேட்டரில் படம் பார்க்கவில்லை என்றாலும், விஜயின் திரைப்படங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக “போக்கிரி” திரைப்படத்தை பல முறை பார்த்திருந்தாலும், மீண்டும் பார்க்கும்போது கூட சலிப்பே ஏற்படுவதில்லை. அதில் உள்ள கதைக்களம், சண்டைக் காட்சிகள், பாடல்கள் மற்றும் விஜயின் நடிப்பு அனைத்தும் என்னை மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றன.
எனவே, எனது மிகவும் விருப்பமான நடிகர் விஜய். அவருடைய திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் “போக்கிரி”. இந்த திரைப்படம் எனது மனதில் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றிருக்கும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அண்ணா
என்றும் உங்கள் ரசிகை (இலங்கையிலிருந்து)