அந்தப் பதிவில், “சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.
அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.
தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை.
இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்துகொண்டு, தங்களைத் தாழ்த்திக்கொண்டுள்ளனர்.
வருங்காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.