முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இக்கோயிலில் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண வரிசை, முதியோருக்கான சிறப்பு தரிசன வரிசை என மூன்று வகையில் முருகனைத் தரிசனம் செய்யலாம். இந்நிலையில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் 25,24,100 ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் ராமு முறைகேட்டில் ஈடுபட்ட மேனகா என்ற பெண் ஊழியரைப் பணியிடை நீக்கம் செய்தார்.

திருக்கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வகையிலும், கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய வகையிலும் ஊழியர் மேனகா மீது சட்டரீதியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி திருச்செந்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து திருக்கோயில் அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ”திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்ளை ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டரில் ஐ.டி.எம்.எஸ்., பயனர் உள்ளிட்டை பயன்படுத்தி ஒருமுறை மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் வசதியைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.