திருப்பதி லட்டு நெய் கலப்பட ஊழல்: திண்டுக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | Tirupati Laddu Ghee Adulteration Scam: ED Raids at 15 Locations, Including Dindigul

Spread the love

திருப்பதி உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளைத் தரிசனம் செய்து செல்வார்கள். லட்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பைக் கலந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து வந்தது.

திருப்பதியில் கொடுக்கபடும் லட்டினை ஆய்வுக்குட்படுத்தியதில்  மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து நெய் சப்ளை செய்த நிறுவனங்கள் நெய் டின்கள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது.

ஏ.ஆர்.புட் டெய்ரி நிறுவனம்

ஏ.ஆர்.புட் டெய்ரி நிறுவனம்

திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தம் பிரிவில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தின் நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருப்பதாகவும், அதில் சோயா பீன்சில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றன என்பன ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *