தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!

Spread the love

தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி.  இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்திரப் பதிவேட்டின் பிரபல ரெளடியான இவரை சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கடந்த சில நாள்களாக தனிப்படை போலீஸார் அவரை தேடி வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மரிய அந்தோணி

கைது செய்யப்பட்ட மரிய அந்தோணி

இந்த நிலையில், குரும்பூர் அருகேயுள்ள சோனகன்விளை- காணியாளன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான போலீஸார், ரெளடி  மரிய அந்தோணியை கைதுசெய்ய முயன்றனர். அப்போது, அவர் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *