திமுகவிடம் 10 தொகுதிகளைக் கேட்டு வாங்கிய தேமுதிக 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. அதாவது விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் முன்னிலையில் இருக்கிறார்.
அதுபோல 8 தொகுதியில் போட்டியிட்ட விசிக காட்டுமன்னார் கோயில் தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

பல பஞ்சாயத்துக்களை செய்து திமுகவிடம் 28 தொகுதிகளைப் பெற்ற மூன்று இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.
4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, சீர்காழி தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
5 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2 இடங்களில் முன்னிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.