‘அரசுத் தோ்வுகளில் முறைகேடுகள் நடப்பது, இளைஞா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாட முயற்சிக்கும் சக்திகளை ஒடுக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போதைய மசோதா மூலம் அரசுப் பணி தோ்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் உறுதி செய்யப்படும். தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் இம்மசோதா உறுதிசெய்யும்’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.