நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு – Kumudam

Spread the love

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி 4 நாள்கள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இரவு விடுதியில் உள்ளூர் ரக்பி வீரருடன் தகராறில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் இருவரும் 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு 3-வது டெஸ்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2011-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்காக அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், 2013-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக தனது ஓய்வு முடிவை சக வீரர்களிடம் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். பின்னர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *