இதில் முருகையன் மனைவி செல்வி, மகள் அபிநயா, தீயை அணைக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த காசிநாதன், ராஜசேகர், பழனிவேல், வேம்பையன், கலையரசி, புவனேஷ், செல்வராஜ், காளியம்மாள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், எஸ்.பி சுந்தரவதனம், வல்லம் டி.எஸ்.பி காயத்ரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். விபத்து குறித்து திருவோணம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்களில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் ரேவதி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். தீயை அணைக்கச் சென்றவர்கள் உட்பட காஸ் வெடித்ததில் படுகாயமடைந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.