அதுவும் மக்கள் என் மேல் காட்டும் அன்பு பரிசுகளுக்கும் மேலானது. அவர்களின் அன்பால்தான் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நான் நடித்த அனைத்து படங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தமான படம் “ஜெயம்’தான்.
இன்னும் எவ்வளவு படங்கள் நடித்தாலும், அந்தப் படத்தால்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுத்தால் என் வாழ்க்கையில் நடந்த நாடகங்களே பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறும்.

நிம்மதி மற்றும் வெற்றி என்பதற்கு இடையில் நான் எப்போதும் நிம்மதியையே தேர்ந்தெடுப்பேன். வெற்றி என்று நான் கருதுவது மக்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பைத்தான்.
கூடவே, புகழ் மற்றும் மகிழ்ச்சிக்கு இடையில் நான் சந்தேகமில்லாமல் மகிழ்ச்சியைத்தான் தேர்வு செய்வேன்.
நான் நடிகன், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி மக்களுக்கு என்னைப் பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் அன்பு, பாசம், கருணை மிகுந்தவன் என்பேன்” எனப் பகிர்ந்துகொண்டார்.