நீட் கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு \ High Court orders opportunity for student to change incorrectly selected category in NEET counselling

Spread the love

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். இதனால் அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன்.

ஆனால், கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவின்போது கவனக்குறைவாக ‘Foreign National (Other than OCI)’ என்ற பிரிவைத் தேர்வு செய்துவிட்டேன். அதற்கு பதிலாக ‘OCI’ பிரிவைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.

பின்னர் இந்தத் தவறைச் சரிசெய்ய முயன்றபோது, MCC இணையதளத்தில் OCI அட்டையைப் பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களைப் பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பேசும் போது, “மத்திய அரசு மற்றும் மருத்துவக் கலந்தாய்வுக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் பதிவு செய்யும்போது தங்களது விவரங்களை அவர்களே பதிவு செய்வதால், மருத்துவக் கலந்தாய்வுக்குழு தன்னிச்சையாக ஒரு மாணவரின் பிரிவை மாற்ற முடியாது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீதிமன்றம் அனுமதித்தால், மாணவரின் பிரிவை மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். மேலும், OCI பிரிவைக் கோரும் மாணவர், MCC இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட கலந்தாய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்” என்று தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *