நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் – போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்! \ three youth were arrested for smuggling a car in nellai.

Spread the love

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.

வீட்டுக்குள் கார் நிறுத்த இடவசதி இல்லாததால், இரவு நேரத்தில் வீட்டின் முன்பகுதியில் தெருவிலேயே காரை நிறுத்துவது வழக்கம். அதன்படி காரை பார்க்கிங் செய்து விட்டுச் சென்ற அவர், காலையில் பார்த்தபோது காரை காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று இளைஞர்கள், காரை திருடிச் செல்வது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்கள், டவுன் பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் (22), விளாகம் முத்துராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த பாலசதீஷ் (20), டவுன் அண்ணா தெருவில் வசிக்கும் முத்துராஜ் (21) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மூவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *