கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏனென்ஸி பயணிகளை சுற்றுலா அழைத்துச் சென்று வரும் பணிகளைச் செய்து வருகிறது. இந்தச் சுற்றுலா ஏஜென்சிஸ் மூலம் தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த 57 பேர் கையாலாய யாத்திரைச் சென்றனர்.

கடந்த 23ம் தேதி சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்ட் சென்றுள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் மூன்று மினி பேருந்துகளில் சுற்றுலா சென்றவர்கள் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்டனர்.