“படங்களில் பெண்களைக் காட்டும் விதம் கொடூரமானதாகவே இருக்கிறது” – ‘பெத்தி’ பட விவகாரம் குறித்து கங்கனா | actress Kangana Ranaut on Peddi movie controversy

Spread the love

இந்நிலையில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் ‘India Today’-விற்கு இதுதொடர்பாக பேட்டி அளித்திருக்கிறார்.

அதில், “நீங்கள் ஒரு லோக்கல் டிரெயினில் பயணித்தாலும் கூட, அங்கு பெண்கள் ஒரு பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். எனவே, திரைப்படங்களில்தான் அவர்கள் அவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறான ஒன்று.

நீங்கள் லோக்கல் டிரெயினிலோ அல்லது உள்ளூர் பேருந்திலோ பயணித்தால், அங்கு நடக்கும் தள்ளுமுள்ளுகளும் இடிப்புகளும் அதைத்தான் காட்டுகின்றன. இது பொதுச் சாலைகளிலும் கூட நடக்கிறது.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

ஆனாலும், திரைப்படங்கள் பெண்களைக் காட்டும் விதம் மிகவும் கொடூரமானதாகவே இருக்கிறது. அது ‘செக்ஸி-செக்ஸி முஜே லோக் போலே’ போன்ற கவர்ச்சிப் பாடல்களாக இருக்கட்டும், அல்லது ‘சர்க்காய் லோ காட்யா’ போன்ற பாடல்களாக இருக்கட்டும், எல்லாமே அவ்வாறுதான் இருந்திருக்கின்றன.

சில நேரங்களில் ஒரு பெண்ணைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்கும், ஆபாசத்திற்கும், பெண் குலத்திற்கு இழைக்கப்படும் முழுமையான அநீதிக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அறிந்தோ அல்லது அறியாமலோ மங்கிப்போய்விடுகிறது. பொழுதுபோக்குத் துறையின் இயல்பே அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்” என்று கங்கனா கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *