தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை பேசி முடித்திருக்கிறோம். டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் பேசினோம். கம்யூனிஸ்ட்டுகளின் புள்ளிவிவரத்தை கேட்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அது அரசுக்கு தெரியாமல் நடந்திருக்கிறது. பல்கலைகழகங்களுக்கு இடதுசாரி மாணவர்கள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட சம்பவத்துக்கும் வருத்தம் தெரிவித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்றார்.
அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்துக்கும் தவெக அமைச்சர்கள் செல்லவிருப்பதாக தகவல். நாளை விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கின்றனராம்.