ரூபேஷ் மோரே தன்னை பத்திரப்பதிவுத் துறை அதிகாரியாகக் காட்டிக்கொண்டார். அவர்களை நம்பி ஜாவேத் குடும்பத்தினர் ரூ.16.24 கோடியை இத்திட்டத்தில் முதலீடு செய்தனர். இதற்கான பத்திரப் பதிவை ஜாவேத் வீட்டிற்கே சென்று முடித்தனர்.
ரூபேஷ் மோரே நடிகர் ஜாவேத் ஜாஃப்ரியின் வீட்டிற்குச் சென்று டெவலப்பர் சார்பாக ஜாவேத் மற்றும் சாட்சிகளின் புகைப்படங்கள், கையொப்பங்கள் மற்றும் கட்டைவிரல் பதிவுகளைப் பெறுவதற்கு அரசாங்கப் பதிவு அலுவலகங்களில் இருப்பதைப் போன்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பெற்றார்.

கடந்த ஆண்டு ஜாவேத் குடும்பத்தினர் பாந்த்ராவில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று தாங்கள் பதிவு செய்த பத்திரங்களைக் காட்டி விசாரித்தபோது, அது போன்ற எந்த ஒரு பத்திரமும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து தங்களது பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி ஜாவேத் குடும்பத்தினர் கேட்டனர். நிஷித் பட்டேல் பணத்தைத் திரும்பக் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கடந்த மாதம் மும்பை கார்ரோடு போலீஸில் முறைப்படி புகார் செய்தனர். அதன் அடிப்படையில் நிஷித் படேல், மகேஷ் பாட்டீல், ரூபேஷ் மோர், சாகர் மேத்தா, தேவேந்திர பட்வால் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதில் நிஷித் பட்டேல் மற்றும் மோரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோரே, கிராபிக் டிசைனர் என்பதால் அவரைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்ததாக நிஷித் பட்டேல் தெரிவித்துள்ளார். அவர்கள் பத்திரப் பதிவுக்குப் பயன்படுத்திய இயந்திரங்கள் மற்றும் போலி சீல்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த மோசடியில் முக்கியக் கூட்டாளியாகக் கருதப்படும் மகேஷ் பாட்டீல் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பணிக்கும் வரவில்லை. அவரது வீட்டிலும் இல்லை. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க குற்றப்பிரிவு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.