`புது படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி!’ – திரைத்துறைக்கு முதல்வர் கொடுத்த `ட்ரீட்’ |Permission Granted for Five Daily Screenings of New Films, Treat for the Industry from the Chief Minister!

Spread the love

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கடந்த மே 16-ம் தேதி முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.

உள்ளாட்சி வரி ரத்து, திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகளுக்கு அனுமதி, சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் முதல்வர் விஜய், புதிய திரைப்படம் வெளியான நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஐந்து காட்சிகள் வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால், விடுமுறை தினங்களில் திரையரங்குகளுக்கு எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்த உத்தரவு குறித்து வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *