மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கடற்கரையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும்.
இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் “புகார் நகரமாகப்’ பெரும்பங்கு வகிக்கிறது, பூம்புகார்.
பூம்புகாரில் கடற்கரை மட்டுமன்றி கண்ணகி, கோவலன், மாதவியின் வாழ்க்கை முறைகளை அறிவதற்கான கலைக்கூடமும், தொல்லியல் ஆய்வுக்கூடமும் இயங்கி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது கூடும் இடமாகவும் இது விளங்குகிறது.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீருக்குத் தவிக்கும் நிலையும், இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சற்றுத் தொலைவே செல்ல வேண்டிய சூழலும் நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பேசியபோது, “நாங்க எல்லாருமே வெளியூர்ல இருந்து வந்திருக்கோம். இங்க பீச்ல குடும்பமா பொழுதைக் கழிக்க வந்தா… அவசரத்துக்குக்கூட ரெஸ்ட்ரூம் இல்லை. இங்கிருந்து இருநூறு – முன்னூறு மீட்டர் தள்ளி காட்டுப்பகுதி மாதிரி இருக்குற இடத்துல கட்டி வெச்சிருக்காங்க.
சின்ன வயசு ஆளுங்க ஏதோ சமாளிச்சிட்டு நடந்து போயிடுவாங்க. ஆனா வயசானவங்க எப்படி அவ்வளவு தூரம் நடந்து போக முடியும்? இங்க பீச்சுக்குப் பக்கத்துலயே ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கு. ஆனா, அதை மூடி வெச்சிருக்காங்க.