துருவ் விக்ரமிற்கு “பைசன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தை டோலிவுட்டின் ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தமிழில், ‘டியூட்’, ‘குட் பேட் அக்லி’, ‘மொத ராத்திரி’ படங்களைத் தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
‘ஆதித்ய வர்மா’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கரண் அரவிந்த் குமார், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நேற்றைய தினம் படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு ‘ஜாக்கி’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்கக் கமர்சியல் படமாக இது இருக்கும் என்பதையும் போஸ்டர் அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது படக்குழு.