போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தாலும், ஆட்டத்தின் நேர அதிகரிப்பு என்பது ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி 4 மணி 22 நிமிடங்கள் ஜவ்வாக இழுத்தது.
இதனால், போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் கவாஸ்கர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கவாஸ்கர், “போட்டியின்போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன. மைதானத்தில் தேவையில்லாமல் மாற்று வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் வருவதைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.