மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோயில் ஒன்றில் பக்தர்கள் நேற்று மாலையில் திரளாக பூஜைக்காக கூடி இருந்தனர். மழை பெய்தவுடன் அவர்கள் அனைவரும் அங்கு போடப்பட்டு இருந்த இரு குடில்களில் ஒதுங்கினர். புயல் மற்றும் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் ஒதுங்கிய கோயில் குடில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். மற்றொரு குடிலில் இருந்த மேற்கூரையை சூறாவளிக்காற்று அடித்துச்சென்றுவிட்டது.

சுவர் இடிந்தவுடன் மற்ற பக்தர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அங்கு காவலுக்கு வந்திருந்த போலீஸார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்தனர். சுவர் இடிபாடுகளில் சிக்கி 14 வயது பையன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில்,”குடில் சுவர் வழக்கமான செங்கல் மூலம் கட்டப்படவில்லை என்றும், அங்குள்ள மலைப்பகுதியில் கிடைக்கும் கற்களை கொண்டு செய்யப்பட்ட செங்கலால் கட்டப்பட்டது என்று தெரிவித்தனர்.

கோயிலுக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் காட்டுக்குள் இருந்ததால் மீட்பு குழுவினருக்கு உடனே தகவல் கிடைக்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சூறாவளிக்காற்று 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *