தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி டிரைவர்களுக்கு மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர்.

திருச்செந்தூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் 3 ஆம்னி பேருந்து டிரைவர்களைப் பரிசோதனை செய்ததில் 3 பேருந்து டிரைவர்களும் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது.