Cricket
oi-Yogeshwaran Moorthi
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 81 ரன்களை குவித்துள்ளார். இந்தப் போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஷி 102 மீட்டருக்கு சிக்ஸ் ஒன்றை விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்ட சூழலில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் அபிஷேக் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த பொறுப்பையும் எடுத்து கொண்டார். மறுபக்கம் இஷான் கிஷனாலும் விரைவாக ரன்கள் சேர்கக் முடியாமல் தடுமாறினார். அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரிகளிலேயே சிறப்பாக டீல் செய்தார். இதனால் 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி அடிக்கும் 2வது அரைசதம் இதுவாகும். இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி புயலாக மாறினார். அப்போது 13வது ஓவரை வீச கேப்டன் சிக்கந்தர் ராசா அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் டவுன் தி டிராக் இறங்கி வந்து வைபவ் சூர்யவன்ஷி தூக்கி அடித்தார். அது 120 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்று விழுந்தது.
இது ஜிம்பாப்வே ரசிகர்களை மட்டுமல்லாமல் வீரர்களையும் மிரள வைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசி புதிய சாதனையை சுட்டிக் குழந்தை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸ் உட்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இங்கிலாந்து டி20 தொடர் வைபவ் சூர்யவன்ஷி நினைத்தவாறு ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரின் போது வைபவ் சூர்யவன்ஷி மீது சிறுது அழுத்தம் இருந்தது. அதனை உணர்ந்து 3 இன்னிங்ஸில் 2 அரைசதம் உட்பட 151 ரன்களை குவித்துள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.