ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் வந்து செல்லும் பள்ளியில், பயன்படுத்தக்கூடிய அளவில் கழிவறைகள் இருப்பதும், அவை தொடர்ந்து சுத்தமாகப் பராமரிக்கப்படுவதும் அவசியம். குறிப்பாக, மாணவர்கள் தங்களுடைய இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பள்ளிக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
தற்போது இருக்கும் கழிவறைகளில் பழுதடைந்தவற்றைச் சரிசெய்து, பயன்படுத்த முடியாதவற்றைச் சீரமைத்து, முறையாக சுத்தம் செய்து, பராமரிப்பை உறுதி செய்தால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளியின் இந்த அடிப்படைப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைவில் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.