மாவட்ட நிர்வாகம் டு காலநிலை மாற்றம்! முதல்வர் விஜய் தலைமையில் 2 நாள் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு | IAS, IPS, IFS officers meet under CM vijay leadership

Spread the love

முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலுமிருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில்,

* சட்டம்-ஒழுங்கு,

* பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு,

* பொது சுகாதாரம்,

* போதையில்லா தமிழ்நாடு திட்டம்,

* பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன்,

* அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது,

* முதியோர் நலன்,

* சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது,

* அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,

* புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *