ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் முதல்வர் விஜய்யை நோக்கி வைத்த விமர்சனமும் அதற்கு அமைச்சர் ஆதவ் கொடுத்த பதிலும் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது.
ஆளுநர் உரையைப் பற்றிய விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் தவெக அரசைப் பற்றியும் முதல்வர் விஜய்யை பற்றியும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அவரின் சில கருத்துகள் அவைக்குறிப்பிலிருந்தும் நீக்கப்பட்டன. ஆஸ்டின் பேசுகையில், “பெண்கள் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் என்ன நடந்தாலும் வாயே திறக்கமாட்டேன் என முதல்வர் சரித்திர புரட்சி செய்துள்ளார்’ என முதல்வர் விஜய்யை நோக்கி கூறினார்.