3 மாதங்கள் 20 நாள்கள் கழித்து அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஈரான் போர் தொடங்கியதில் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் பிரச்னையில்லை… பாதிப்பில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டதில் உலக நாடுகள் அனைத்துமே பாதிப்பைச் சந்தித்தன.
இதனால், உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்திருந்த தருணம் இதுதான்.
ஏப்ரல் மாதத்திலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தம் இருந்தாலும், லெபனானை இஸ்ரேல் தாக்குவது, ஈரான் ஆதரவுக்குச் செல்வது, அமெரிக்கா ‘தற்காப்புத் தாக்குதல்’ நடத்துவது, ஈரான் மத்தியக் கிழக்கு நாடுகளைத் தாக்குவது என அவ்வப்போது நடந்து வந்தது.
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய, பேச்சுவார்த்தையும் நடந்திக்கொண்டேதான் இருந்தது.

அதன் விளைவாக, நாளை (ஜூன் 19), ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதாக இருந்தது.
ஜி7 மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரான்ஸ் சென்றிருக்கிறார். பிரான்ஸில் உள்ள வெர்சாயில், முன்பாகவே நேற்று (பிரான்ஸ் நேரப்படி), ட்ரம்ப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிஜிட்டலாகக் கையொப்பமிட்டுள்ளார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஈரான் தலைநகரான டெஹ்ரானில் இருந்துகொண்டே டிஜிட்டல் வழியாக கையெழுத்திட்டுள்ளார்.
ஆக, முன்பதாகவே, ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.