ரிசர்வ் வங்கி மற்றும் அரசு இணையதளங்களிலும் புகார் செய்தார். அப்படி இருந்தும் ரூ. 16, ரூ. 25 மற்றும் ரூ. 250 மட்டுமே திரும்பப் பெற முடிந்தது. வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தனது வங்கிக்கணக்கை பிளாக் செய்யும்படி ராஜேஷ்வரி கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்ட பிறகும் அவரது வங்கிக்கணக்கில் ரூ. 12.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு முறையான விசாரணைக் குழுவை அமைப்பதாகச் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவர் உறுதியளித்ததாகவும் ஆனால் தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் ராஜேஸ்வரி கூறினார்.
ராஜேஷ்வரி பிரதமரின் CPGRAMS மற்றும் முதலமைச்சரின் குறை தீர்க்கும் இணையதளங்களையும் அணுகி அதிலும் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத போதிலும், பிரதமரின் குறைதீர்ப்பு இணையத்தில் தனது புகாருக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது எனக் அவர் கூறினார்.
சைபர் கிரிமினல்கள் ராஜேஷ்வரியின் வைப்புத் தொகையை எடுத்த நவம்பர் 17ம் தேதி வங்கி மற்றும் மும்பை வடக்கு சைபர் போலீஸில் புகார் செய்தார். ஆனால் சம்பந்தப்பட்ட சைபர் அதிகாரி விடுமுறையில் சென்று இருப்பதாகக் கூறி ஜனவரி 3, 2025 அன்றுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.