மெஸ்ஸியின் புதிய உலக சாதனை: ஆஸ்திரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா! | Messi creates new history in fifa world cup

Spread the love

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி ஒரு புதிய சாதனை படைத்து, புது சரித்திரம் எழுதியுள்ளார். விறுவிறுப்பாக நடந்த உலகக்கோப்பை போட்டியில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அதிகாரப்பூர்வமாக அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடந்த இந்த முக்கியமான போட்டியில், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், பின்னர் இரண்டு சூப்பர் கோல்களை அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்றதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் சோர்ந்து போகாமல் ஆடிய மெஸ்ஸி, 38-வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்த கோலின் மூலம், உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை (16 கோல்கள்) மெஸ்ஸி முறியடித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *