மொஹரம்: மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

Dinamani2f2024 072f35cbdd16 2004 4ab1 A6ec 58d546caeb4b2fchennai Metro Eps Final.jpg
Spread the love

மொஹரம் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (ஜூளை 16) அறிவித்தது.

மொஹரம் பண்டிகை நாளை அனுசரிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையால், நாளை அரசு விடுமுறை என்பதால், சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை (ஜூலை 17) இயக்கப்படும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும்,

அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மொஹரம் பண்டிகையையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *