இதனால் சந்தேகம் அடைந்த இணை ஆணையர் இலவச மற்றும் விற்பனை பிரசாத கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுக்கு பதிலாக கூடுதல் எடை கொண்ட லட்டுக்களை தயார் செய்து அவற்றை பிரசாத ஸ்டால்களில் விற்பனை செய்ததுடன் அதற்கான தொகையினை கோயில் கணக்கில் வரவு வைக்காமல் தனது சொந்த கணக்கில் வரவு செய்துள்ளார் பஞ்சமூர்த்தி. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இளநிலை உதவியாளரும் கோயில் உதவி பேஷ்காருமான பஞ்சமூர்த்தி, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அவரது மகன் விக்ரம், பிரசாத விற்பனையாளர்களான சிவனேஸ்வரி, செல்வி, லாவண்யா, அம்பிகா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோயில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படாமல் கோயிலில் பணியாற்றிய கம்யூட்டர் ஆபரேட்டர் சிவா என்பவரது கணக்கில் வரவு செய்யப்பட்ட முறைகேடு நடந்தது. தற்போது பக்தர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பிரசாதம் மற்றும் பிரசாத விற்பனையில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. திருக்கோயிலில் நடைபெறும் இந்த தொடர் முறைகேடுகள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.