ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!| ramkumar death case high court dismisses fathers petition

Spread the love

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்ததற்கு எதிரான மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையிலேயே மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

கொலை செய்யப்பட்ட  சுவாதி

கொலை செய்யப்பட்ட சுவாதி

ஆனால், உண்மைகளை மூடிமறைக்கவே ராம்குமார் சிறையிலேயே கொலை செய்யப்பட்டதாக அப்போதே பலமான சந்தேகங்கள் எழுந்தன.

இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், காவல் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்ற முடிவுக்குவந்து, வழக்கை முடித்துவைத்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *