லிவ்இன் உறவுக்கு எதிர்ப்பு: பெற்றோர், சகோதரியை காதலனுடன் சேர்ந்து குத்திக் கொலைசெய்த இளம்பெண்!

Spread the love

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர்கள் சோம்சுந்தர் மற்றும் அவர் மனைவி முத்துலட்சுமி. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதில் மூத்த மகள் ஸ்வேதா பெற்றோரிடமிருந்து பிரிந்து கென்னத் என்பவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த உறவுக்கு சோம்சுந்தரும், அவர் மனைவியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு ஸ்வேதா சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் கடன் குறித்து அவரது பெற்றோர் அடிக்கடி ஸ்வேதாவிடம் கேள்வி எழுப்பியதால், குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது.

ஸ்வேதா தனது லிவ் இன் பார்ட்னருடன் தனது பெற்றோரை பார்க்க வந்தார். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் இருந்தார். அவருடன் ஸ்வேதா வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் முத்துலட்சுமியை ​​அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.

சித்திரிப்புப் படம்

சித்திரிப்புப் படம்

இதில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டார். உடனே ஸ்வேதாவும், கென்னத்தும் சேர்ந்து ரத்தக்கரையை கழுவினர். சிறிது நேரத்தில் இளைய சகோதரி சுப்ரியா வந்தார். அவரையும் இருவரும் சேர்ந்து அடித்து மற்றும் குத்திக்கொலை செய்தனர்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் சோம்சுந்தர் வந்தார். அவரையும் இருவரும் சேர்ந்து தாக்கினர். உடனே சோம்சுந்தர் வீட்டிற்கு வெளியில் ஓடி வந்து உதவி கேட்டு கத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அவரும் இறந்து போனார். மூவரையும் கொலை செய்த ஸ்வேதாவும், கென்னத்தும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருக்கின்றனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். இக்கொலையை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செய்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *