பழைய வருமான வரி முறையைப் பொறுத்தவரை, அரசாங்கம் மக்கள் நிறைய முதலீடுகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தது. அதனால், முதலீடு செய்தால், உங்களுக்கு வரி விலக்கு என்று சலுகைகளையும் அள்ளிக் கொடுத்தது.
ஆனால், நம் மக்களில் பலர் இந்த விலக்கைத் தவறாக பயன்படுத்த தொடங்கினார்கள். உதாரணத்திற்கு, இன்சூரன்ஸ் செய்திருக்கமாட்டார்கள். ஆனால், இன்சூரன்ஸ் செய்ததுபோல, கணக்குக் காட்டி வரி விலக்கு பெறுவார்கள்.
அது எப்படி என்று கேட்டீர்கள் என்றால், இப்போது வரை, வரி விலக்கை கிளைம் செய்ய, விலக்கிற்கு அப்ளை செய்யும் காரணங்களுக்கான ஆவணங்களைக் காட்ட தேவையில்லை.

இதை பயன்படுத்தி தான் பலரும் வருமான வரித் தாக்கல் செய்வதில் தில்லு முல்லு செய்து வந்தனர்.
இதனால், இதற்கு செக் வைக்க அரசாங்கம் கொண்டு வந்தது தான் – புதிய வருமான வரி முறை.
பழைய வருமான வரி முறையில், ‘முதலில் முதலீடு, அடுத்தது தான் செலவுகள்’ என்றால், புதிய வருமான வரி முறையில், ‘முதலில் வரிக் கட்டுதல், பிறகு தான் சேமிப்பு, செலவு எல்லாம்’.