விஜய் முதல்வர் அரியணையில் அமர திருமா ஆதரவு கொடுப்பாரா? | TN News Live Updates

Spread the love

முதல்வர் அரியணையில் அமர்வாரா விஜய்?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.

விசிக திருமாவளவன்

விசிக திருமாவளவன்

காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக விஜய்க்கு ஆதரவு அளித்திருப்பதால் விஜய்யிடம் 116 இடங்கள் இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து IUML கட்சி ஆதரவு அளிக்கிறோம் என தெரிவித்துவிட்டு பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

விசிக தலைவர் திருமா தவெகவுக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தற்போது மெளனம் காத்து வருகிறார். திருமா இன்று விஜய்க்கு ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதல்வர் அரியணையில் அமர்வாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து இணைந்திருங்கள்…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *